அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

படித்த சிறந்த சிறுகதைகள்

Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 11:22 pm

வெளிநாட்டு பயணம்


நான் வெளி நாடுகளுக்குப் போனதில்லை. அன்னியர் வீட்டில் நுழைந்து பார்த்து, "அங்கே அது இருக்கிறது; இது இருக்கிறது, நம்மிடம் அதெல்லாம் இல்லையே...' என்று, தம் வீட்டோடு ஒப்பிட்டு ஏங்கி, அங்கலாய்க்கும், அலையும் குணமே, வெளிநாடு சுற்றிப் பார்க்கும் பலரிடமும் நிறைந்திருப்பதாக, எனக்குத் தோன்றுகிறது.வேடிக்கை பார்ப்பதற்காகச் சிலர் செல்கின்றனர். எனக்கோ, நம் வீதிகளில் நடக்கும் வேடிக்கைகளே, இன்னும் பார்த்துத் தீரவில்லை. புதுமைகளை ரசிப்பது எனில், என்னைத் தேடி வரும் ஒவ்வொன்றுமே, புதுமையாக இருக்கின்றன. கற்றுக் கொள்வதற்காக எனில், என்னைச் சுற்றி இருக்கும் மிகக் குறுகிய வட்டத்தில் கூட, நான் காணவும், கற்கவும், ஏராளமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.ரஷ்ய எழுத்தாளர்களான கோகோல், புஷ்கின், தாஸ்தியேவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனீவ் ஆகியோரின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். அவர்கள் நேசித்த ருஷ்ய ஆத்மா மிக உயர்வாக இருந்தது. அதன் காரணமாகவே, ரஷ்யாவை காண, நான் ஒருமுறை இசைந்தேன்.நம் பெருமையை உலகு அறிவதற்காக, அதனால், உலகு பயன் உறுவதற்காக - ஒரு விவேகானந்தர் போல் நம்மால் போக முடியுமா?அல்லாமல், லண்டனில் இட்லி - சாம்பார், கும்பகோணம் வெற்றிலை - சீவல் கிடைப்பதைப் பற்றி, கதை அளந்து, ஜப்பானிய, "கீய்ஷா' பெண்களைப் பார்த்து, "அப்பப்பா... அச்சச்சோ!' என்று வாய் பிளந்து, ஆச்சரியப் படுவதற்கும் தானா போக வேண்டும்!சுங்க இலாகா சோதனை, வருமான வரி சர்ட்டிபிகேட், பாஸ்போர்ட், விசா, அறிமுகக் கடிதங்கள், இத்யாதி சங்கடங்களைத் தாங்கிக் கொண்டு, ஒரு சர்வதேச கைதி போல, இந்தச் சடங்குகளைச் சுமந்துகொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் ஏறியும், இறங்கியும், நான் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்று எனக்குத் தெரியும். நான் இருக்குமிடத்தில் தான், எனக்குச் சிறப்பு.எங்கும், எல்லாரும் சுதந்திரமாகத் திரியும் காலம் வரும். அப்போது, எல்லாருக்கும் இந்த மோகம் குறையும். எனக்கு, இப்போது இந்த மோகம் இல்லை.
நான் வெளி நாடுகளுக்குப் போனதில்லை. அன்னியர் வீட்டில் நுழைந்து பார்த்து, "அங்கே அது இருக்கிறது; இது இருக்கிறது, நம்மிடம் அதெல்லாம் இல்லையே...' என்று, தம் வீட்டோடு ஒப்பிட்டு ஏங்கி, அங்கலாய்க்கும், அலையும் குணமே, வெளிநாடு சுற்றிப் பார்க்கும் பலரிடமும் நிறைந்திருப்பதாக, எனக்குத் தோன்றுகிறது.

வேடிக்கை பார்ப்பதற்காகச் சிலர் செல்கின்றனர். எனக்கோ, நம் வீதிகளில் நடக்கும் வேடிக்கைகளே, இன்னும் பார்த்துத் தீரவில்லை. புதுமைகளை ரசிப்பது எனில், என்னைத் தேடி வரும் ஒவ்வொன்றுமே, புதுமையாக இருக்கின்றன. கற்றுக் கொள்வதற்காக எனில், என்னைச் சுற்றி இருக்கும் மிகக் குறுகிய வட்டத்தில் கூட, நான் காணவும், கற்கவும், ஏராளமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.

ரஷ்ய எழுத்தாளர்களான கோகோல், புஷ்கின், தாஸ்தியேவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனீவ் ஆகியோரின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். அவர்கள் நேசித்த ருஷ்ய ஆத்மா மிக உயர்வாக இருந்தது. அதன் காரணமாகவே, ரஷ்யாவை காண, நான் ஒருமுறை இசைந்தேன்.

நம் பெருமையை உலகு அறிவதற்காக, அதனால், உலகு பயன் உறுவதற்காக - ஒரு விவேகானந்தர் போல் நம்மால் போக முடியுமா?

அல்லாமல், லண்டனில் இட்லி - சாம்பார், கும்பகோணம் வெற்றிலை - சீவல் கிடைப்பதைப் பற்றி, கதை அளந்து, ஜப்பானிய, "கீய்ஷா' பெண்களைப் பார்த்து, "அப்பப்பா... அச்சச்சோ!' என்று வாய் பிளந்து, ஆச்சரியப் படுவதற்கும் தானா போக வேண்டும்!

சுங்க இலாகா சோதனை, வருமான வரி சர்ட்டிபிகேட், பாஸ்போர்ட், விசா, அறிமுகக் கடிதங்கள், இத்யாதி சங்கடங்களைத் தாங்கிக் கொண்டு, ஒரு சர்வதேச கைதி போல, இந்தச் சடங்குகளைச் சுமந்துகொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் ஏறியும், இறங்கியும், நான் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்று எனக்குத் தெரியும். நான் இருக்குமிடத்தில் தான், எனக்குச் சிறப்பு.

எங்கும், எல்லாரும் சுதந்திரமாகத் திரியும் காலம் வரும். அப்போது, எல்லாருக்கும் இந்த மோகம் குறையும். எனக்கு, இப்போது இந்த மோகம் இல்லை.

நன்றி ; ஜெயகாந்தன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 1:16 pm

தாயாகத் தந்தையாக…
--------------
சேர்மனியில் பிரதானமான நகரங்களில் ஒன்று பிராங்போட் மெயின்ஸ். அங்கே உள்ள மண்டபம் ஒன்றில் தனத்தின் நண்பரின் திருமண விருந்துபசார நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அவன் தனது இரண்டு பிள்ளைகளுடன் அதற்கு வந்திருந்தான். திருமணத் தம்பதியினருடன் புகைப்படம் எடுப்பதற்காக மேடைக்கு குழந்தைகளையும் அழைத்துச் சென்று, நின்றபோது, மேடைக்கு முன்னிருந்த அனைவரினது கண்களும் அவனையும் அவன் பிள்ளைகளையும் உற்று நோக்கின.

புகைப்படம் எடுந்து முடிந்தபின் தனம் தனது பிள்ளைகளை அணைத்துக் கூட்டிச் சென்று, முன்பிருந்த இடத்தில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தான். அப்போது அங்கே வந்த ஒருவர் "இவர்கள் என்ன இரட்டைப் பிள்ளைகளா" என வினாவினார்.

தனம் "ஓமோம்..." என்றான்
"இரட்டைப் பிள்ளைகள் ஆணும் பெண்ணுமாப் பிறப்பது அதிஸ்டம்தான்… இவையளின்ரை அம்மா எங்க? வேலைக்கா? "என்றார்
" இல்லை… வரவில்லை…. "
தொடர்ந்து அங்கே இருந்தால் பலபேரின் கேள்விக்கு உள்ளாகலாம் என நினைத்த தனம், அங்கிருந்து வெளியேறினான்.

அப்போது அவனுக்கு கடந்த கால நிகழ்வுகள் அலைபோல் மனதில் ஆர்ப்பரித்தன.
அவன் பிராங்போட் நகருக்கு அண்மையில் உள்ள சிறியநகரம் ஒன்றின் அலுவலகத்தில் பிரதான உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்தான். மதியச் சாப்பாட்டுக்கு அருகில் உள்ள உணவகத்துக்குச் சென்று உணவருந்துவது வழக்கம். அங்கே தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பணியாற்றி வருவதைக் கண்டபோது அவருடன் பேச வேண்டுமென்ற எண்ணம் தலைதூக்க அப்பெண்ணுக்கு அருகில் சென்று, அவளுடன் பேசித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

இருவரும் சிறிது நேரம் பேசினார்கள். பின்னர் அடிக்கடி சந்தித்துப் பேசத் தொடங்கினார்கள்.
ஒருநாள் ஏதோ வேலை விடயமாக தனம் உணவருந்த வரவில்லை.
வருவார் வருவார் என எதிர்பார்த்திருந்தவளுக்கு அவன் வராதது ஏமாற்றமாக இருந்தது.
மறுநாள் தனம் வந்தபோது, அவள் அவனருகில் சென்று "நேற்று நீங்கள் வராதது எனக்கு மகிழ்ச்சியைத் தொலைத்த மாதிரி இருந்தது " என்றாள்.

" ஏன் அப்படி? "
" இல்லை… இங்க… எந்தத் தமிழ் ஆட்களும் வாறதில்லை. நான் இருக்கிற இடத்திலும் தமிழ் ஆட்கள் இல்லை… உங்களைக் காணும்போது ஒரு பேச்சுத் துணை வந்த சந்தோசம்… அதனால்தான். நீங்க வராதது… ஒரு மாதிரி இருந்துச்சு…"
" அதென்ன ஒருமாதிரி… என்றவன், எனக்கும் அப்படித் தான்… " எனக் கூறினான்.
"மெய்யாவா!"
" மெய்யாகத்தான்."

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டார்கள்.
ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்போது " வீட்டைபோனால் உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு? " எனத் தனம் கேட்டான்.
" ரிவி, இன்ரெநெற், ஸ்கைப், ரெலிபோன்…என பொழுதுபோகுது."
" அப்படியானால் ஒருநாளைக்கு நாங்க எங்கேயாவது சந்தித்து ஆறுதலாகப் பேசலாமே…"
" நல்லது… ஆனால் லீவு எடுக்கிறதுதான்…"
"ஏன் உங்களுக்கு லீவு இல்லையா?"
" இருக்கு… கேட்கவேணும்… உங்களுக்கு எப்ப லீவு?"
" எனக்கு… சனி ஞாயிறு லீவுதான். சனிக்கிழமை கொஞ்சம் வீட்டு வேலை செய்வன். ஞாயிறு… அங்கை இங்கையென்று….. ஓய்வுதான்… சிறிது நேரம் அவன் யோசித்தபின் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்... ஞாயிற்றுக்கிழமை லீவு எடுங்கள்… வேறை எங்காவது ஒரு இடத்துக்குப் போயிருந்து சாப்பிட்டுச் சாப்பிட்டு ஆறுலலாகப் பேசலாம்…"

" முயற்சி செய்கிறன்… "
மறுநாள் இருவரும் சந்தித்தார்கள்.
தனம் லீவைப் பற்றிக் கேட்டான்.
அவள் "ஒருமாதிரி ஞாயிற்றுக்கிழமை எடுத்திருக்கிறன்."
" நல்லது. அப்ப… நீங்கள் எத்தனை மணிக்கு வருவீங்கள்?"
" அடிக்கடி கள் பாவிக்கிறீங்க… "
" நான் கள்ளுப் பாவிக்கிறதில்லை… "
" நான் அந்தக் கள்ளைச் சொல்லவில்லை… "நீங்கள் என்று விகுதியிலை வாறத்தைச் சொன்னனான்."
" அப்படியா..? அப்ப பேரைச் சொல்லுங்களன்.".
" சுதாஜினி…. "
"நல்ல பெயர்… சுதாஜினி. நீங்கள்…"

" ம்ம்… பிறகும் கள்ளா? " என்று அவள் கூறி, அவன் கூற வந்த வார்த்தையை தடுத்து விட்டாள்.
அவன் அதைக் கைவிட்டு, " கள்ளா என்று என்னையா…" என்றான்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது.
அவனும் சிரித்தான்.
இருவரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தார்கள்.

எங்கே எப்போது சந்திப்பதென்று இருவரும்; தீர்மானித்துக் கொண்டதுடன் தொலைபேசி எண்களையும் பரிமாறிக் கொண்டார்கள்.
மறுநாள் சுதாஜினி அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை.
அவள் மனம் படபடத்தது.
சிறிது நேரம் தாமதமாக அவன் வந்தான். வரும்போதே, "மன்னிக்கவும் சுதாஜினி. வழியில வாகன நெரிசல் ஏற்பட்டுப்போச்சு." என்றான்.
அவள் பொய்க் கோபம் காட்டித் தலையை ஆட்டினாள்.
காரின் முன் கதவைத் திறந்து " ஏறுங்க…" என்று கூறிய பின், " முதலில் வலது காலை வைச்சு ஏறுங்க… " என்றான்.
அவள் சிரித்தபடியே " எல்லாம் என்ரை கால்தான் " எனக் கூறிக்கொண்டு, காரின் முன்பக்கம் ஏறி, அவனுக்கருகில் அமர்ந்துகொண்டாள்.
இருவரும் பிரபலமான ஒரு உணவகத்துக்குச் சென்றார்கள். .
தனம் '"உங்களுக்கு விருப்பமான சாப்பாட்டுக்குச் சொல்லுங்க…" என்றான்.
"எனக்கு என்னெண்டாலும் பிரச்சினையில்லை… நீங்க சொல்லுங்க... "
" இல்லை நீங்க சொல்லுங்க… நீங்கதான் முதலில் சொல்ல வேண்டும்... பன்மையில பேசாதீங்க…"
"சரி…. எதைச் சொல்ல…"
பேச்சில் இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையிலே குறிப்பிட்டார்கள்.

இருவரும் ஒரே உணவுக்கு சொன்னார்கள்.
உணவு வந்தது. இருவரும் உரையாடியபடியே சாப்பிட்டார்கள்.
உணவிற்கான கட்டணத்தை அவனே கொடுத்தான். பின்னர் இருவரும் ஒரு ஆற்றங்கரைக்குச் சென்று அதன் அருகில் அமர்ந்திருந்து பேசினார்கள். இவ்வாறு இருவரும் தொடர்ந்து சந்திக்க, சந்திக்க இருவரிடையேயும் மிக நெருக்கம் ஏற்பட்டு அது அவர்கள் உள்ளங்களில் காதலாக மலர்ந்தது.
ஒருநாள் ஒரு குளக்கரையிலே அமர்ந்திருந்து, அங்குள்ள நீர்பறவைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது, இரண்டு வெள்ளை அன்னங்கள் சோடியாக நீந்தி வந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். சுதாஜினி அன்னத்தைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசினாள்.
அவன் சிரித்தான். பின்னர் அவன் " நானும் திருமணம் செய்யலாம் என யோசிக்கிறன்…" என்றான்.
" யாரை …? " அவன் முகத்தைப் பார்த்தாள்.
அதற்கு அவன் பதில் கூறவில்லை.

மீண்டும் கேட்டாள். "யாரைத் திருமணம் செய்யப் போகிறீர்கள்?"
" நாளைக்குச் சந்திக்கும்போது கூறுகிறன்."
மாலை வேளை குளிர்காற்று மெல்ல வீசியது. இருவரும் எழுந்து சென்றார்கள்.
இரவு முழுதும் சுதாஜினிக்கு, யாரைத் திருமணம் செய்யப் போகிறார்? என்பதே கேள்வியாக இருந்தது.
மறுநாள் காலை தனத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி எடுத்தாள்.
" என்ன நீங்க இன்றைக்கு வேலைக்குப் பொகவில்லையா? " என்றான்.
" கொஞ்சம் தலையிடியாக இருந்தது…. அதனால போகவில்லை…"
" அப்ப உங்களைப் பின்னேரம் சந்திக்கிறன்…"
" ஓ சந்திப்பம்…. நேற்றுச் சந்தித்த இடத்தில் …. "அங்கே அன்னம் பார்க்கலாம்… வாறன்…"
மறுநாள் இருவரும் சந்தித்தார்கள்.
அவள் மௌனமாக இருந்தாள்.

"என்ன நீங்கதான் சந்திக்கலாம் எனக் கூறினீங்க… இப்ப மௌனமாக இருக்கறீங்க…"
" நேற்று இரவு ஒரே தலையிடி… அதுதான் ஒரு மாதிரி இருக்கு… பேசிக்கொண்டிருந்திட்டு திடீரெனவும் புறப்பட்டிட்டம். "
" எட… அதுதானா… விசயம். நான் கலியாணம் செய்யப்போவதாகக் கூறினதை பற்றி யோசிச்சிற்றீங்களா?"
" இல்லை… இல்லை… யாரைச் செய்யப் போகிறீங்க என்பதை அறியலாம் என்றுதான்…"

" ஒரு பெண்பிள்ளையைத்தான்… அறிஞ்சா உதவி செய்வீங்களா?"
" அறிந்த ஒருவர். தெரிந்த ஒருவர். செய்வன்தானே. " அவள் பதிலில் சோகம் இழையோடி இருந்தது.
அவள் முகத்தை அவன் பார்த்தான். அவளும் அதைப் பார்த்தாள். " யாரென்று அறிய ஆசைப்படுகிறீங்க… நானும் இன்று கூறுவதாகத்தானே சொன்னனான். யாரையும் இல்லை. உங்களைத்தான்…"

"என்ன என்னையா?"|
"என் மனத்தில் தோன்றியதைக் கேட்டன்… பிழையென்றால் மன்னியுங்கள். "
அவள் மௌனமாக இருந்தாள்.
" உடனடியாகப் பதில் சொல்ல வேண்டுமென்று இல்லை. யோசித்துச் சொல்லுங்க… "
அவள் சிறிது நேரம் குனிந்தபடியே மௌனமாக இருந்தாள்.
குளத்தில் நீர் பறவைகள் சோடியாகவும் கூட்டமாகவும் நீந்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்த தனம் " நீங்கள் காட்டிய அன்னம் சோடியாக வருகுது.. "என்றான்.
தலை நிமிர்ந்து அதனைப் பார்த்தாள். அவள் பார்த்ததையிட்டு அவன் சிரித்தான். அங்கே அன்னமில்லை.

அவள் அவனைப் பார்த்தாள்.
" என்ன கோபமா? நான் கேட்டதில் பிழையிருந்தால் மன்னியுங்கோ என்றும் சொல்லிப்போட்டன். யோசிச்சுச் சொல்லுங்க எண்டும் சொல்லிப்போட்டன். அப்படியிருந்தும் நீங்க பேசாமல் இருக்கிறீங்க… அது எனக்கு உள்ளார தேனையாக இருக்கு… போவம்" என்றான்.
"இல்லை இல்லை இருப்பம்…"
"ம்ம்ம் என்று மூஞ்சியை நீட்டிக்கொண்டா?"
" ஏன் நான் மூஞ்சியை நீட்டிக்கொண்டா இருக்கிறன். மூஞ்சி ஒரே மாதிரித்தான் இருக்கு.

பார்த்தான். " இப்ப அழகாத்தான் இருக்கு…"
"இதுக்கு முந்தி அழகு இல்லையா?"
"அப்படி நான் சொல்லவில்லையே…அன்பாககப் பழகிறீங்க.. அழகா இருக்கிறீங்க.. அறிவா இருக்கிறீங்க… அன்னியோன்னியமாகப் பேசிறீங்க… நல்ல நட்பாக இருக்கிறீங்க.. வேலை செய்யிறீங்க… அதனாலதான் உங்களை எனக்குப் பிடித்தது. திருமணம் செய்யலாமா எண்டு கேட்டன். கேட்டதற்கே இப்படி?"
"உண்மையாகத்தான் கேட்டனீங்களா?"|

" இதென்ன கதையுங்க….. உண்மையாகக் கேட்;காமல்… இப்பவும் கேட்கிறன். உண்மையாகத்தான் கேட்கிறன்."
அவள் மௌனமாக இருந்தாள்.
"என்ன மௌனம்? என்னோடை பேசிறீங்க, பழகிறீங்க, இப்ப மௌனமாக இருக்கறீங்க…"
இபபொழுதும் அவள் தலைகுனிந்து மௌமாக இருந்தாள்.
"மௌமாக இருக்கிறீங்க… மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று நான் எடுக்கலாமா?"
தலையசைத்தாள். குனிந்தாள். அவன் தன் கரம் கொடுக்க அதைப் பற்றி அவள் எழுந்தாள.; அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டாள். சினிமாக் காட்சியில் வருவதுபோல் இருவர் மனமும் உடலும் வானத்தில் மகிழ்வடன் சிறகடித்துப் பறந்தன. .
இருவரும் கை கோர்த்தபடி ஒரு கோப்பிக் கடைக்குச் சென்று கோப்பி அருந்தியபின் வீட்டுக்குச் சென்றார்கள்.

சில மாதங்களின் பின் திருமணம் நடைபெற்றது. இருவரும் சுவிஸ், கோலண்ட் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தார்கள். வேலைக்குச் சென்றார்கள். தனம் தன் வேலை நேரம் முடிந்தபின்
சுதாஜினி வேலை செய்த இடத்தி;குச் சென்று அவளை அழைத்து வருவது வழக்கமாக இருந்தது.
புதிய வீடு எடுத்தார்கள். புதிய தளம்பாடங்கள் போட்டார்கள். நண்பர்களை அழைத்தார்கள். விருந்துபசாம் செய்தார்கள். திருமண முதலாண்டு நிறைவையும் மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.
சுதாஜினி வேலை செய்த இடத்தில் புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்ட போது, சுதாஜினியின் வேலை மாலை நேரமாக மாற்றப்பட்டது. இவ் வேலை நேர மாற்றம் தனத்துக்கு பிடிக்கவில்லை. அதனால் வேலையை விடும்படி கூறினான். அவள் அதற்கு சம்மதிக்கவில்லை.
வேலைநேர மாற்றத்தினால் இருவரும் ஒன்றாகச் சந்திக்கும் நேரம் மிகக் குறைவாக இருந்தது. தனம் வீட்டுக்கு வரும் நேரங்களில் அவள் வீட்டில் இல்லாதது தனத்துக்கு உள்ளாறக் கவலையை ஏற்படுத்தியது.

அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு தொலைபேசி எடுத்தாலும் மனைவியுடன் பேச முடிவதில்லை. அந் நேரங்களில் அவள் தொலைபேசி, ஸ்கைப்,, முகநூல் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் பொழுது போக்கிக் கொண்டிருந்தாள். இதனால் பல புதிய நண்பர்களின் தொடர்பும் அவளுக்குக் கிடைத்தது. ஆனால் கணவனின் தொடர்பு குறைந்தது.
" நான் ரெலிபோன் எடுக்கிற நேரங்களில் யாரோடை கதைக்கிறாய்… ஏதாவது அவசரமென்றாலும் தொடர்பு கொள்ள முடியாம இருக்கு…" என்று அவன் ஒருநாள் கோபமாகப் பேசினான்.
அதைக் கேட்டு அவள், அவன்மேல் சீறி விழுந்தாள். இச் செயல் தனத்துக்க மேலும் கவலையை அதிகரித்துக்கொண்டிருந்தது.
இந்நிலையில் சுதாஜினி தாய் தகப்பனைப் பார்க்க இந்தியா செல்ல வேண்டுமென்று தனத்திடம் கூறினாள்.

அவன் யோசித்தான். அதன் பின் போய் வர ஒழுங்க செய்வதாகக் கூறி அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டான். விமான நிலையத்திற்கு சென்று அவளை வழியனுப்பி வைத்தான்.
மூன்று கிழமைகளின்பின் அவள் திரும்பி வந்தாள். தனம் விமான நிலையத்திற்கு சென்று அவளை அழைத்து வந்தான்.

வீட:டுக்கு வந்தவள் யாருக்கோ தொலைபேசி எடுத்து பேசினாள்.
"வீட:டுக்கு வந்து ஆறுதலாக இருக்கக்கூட இல்லை. அதுக்குள்ள ரெலிபோன்… யாரோடை பேசுகிறாய்…?"
" நான் யார்… யாரோடை பேசுகிறன் என்று எல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். " எனக் கூறி, சுதாஜினி சத்தம் போட்டாள்.
தனம் மௌனமாக இருந்தான்.
இதிலிருந்து இருவருக்கும் முறுகல் நிலை தோன்றி, படிப்படியாக அதிகரித்தது. அதனால் சில வேளைகளில் தனம் தன் நண்பர்கள் வீடடில் தங்கும் நிலை ஏற்பட, சுதாஜினி வீட்டில் தனிமையில் இருக்கும் நிலை தோன்றியது,
பாவம் என்ன செய்கிறாளோ.. என எண்ணித் தனம் வீட்டுக்கு செல்லும் வேளைகளிலும் அவள் தொலைபேசியிலோ, ஸ்கைப்பிலோ மற்றவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பாள். இச்செயல் தனத்துக்கு மேலும் சினத்தைத் தூண்டுவதாகவே இருந்ததுடன், இருவருக்குமிடையே முரண்பாடுகளை மேலும் படிப்படியாக வளர்த்த வண்ணமாகவே இருந்தது.
எத்தனையோ பெண்களை இச் செய்தித் தொடர்புகள்தான் கெடுத்துள்ளன. என யோசித்த தனம் மனைவியைக் கண்டித்தான்.
ஆனால் அவள் கேட்கவில்லை. கோபம் கொண்டாள். "எங்களை அடக்கியாள நினைக்காதையுங்கோ…" என்று ஆவேசமாகக் கத்தி, " இப்படியானல் இருவரும் சேர்ந்த வாழ்வது கஸ்டம் " என்றம் கூறினாள்.
தனம் மௌனமாக இருந்தான்.

மீண்டும் அவள் " நாளைக்கே இதற்கு ஒரு முடிவெடுகிறன் " எனக் கூறினாள். அதற்கமைய சட்டத்தரணி ஒருவரை நாடினாள். அவளின் முறைப்பாடு கோடு வரை சென்றது.
நீதிபதி விவாகரத்துக்கு ஒருவருடம் அவகாசம் கொடுத்தார்.
அவள் வேறு இடத்துக்கு சென்று தங்கினாள்.

இக்காலத்தில் சுதாஜினியின் உடலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. வைத்தியரை நாடினாள். உடல் பரிசோதனையின் போது அவள் கற்பமடைந்துள்ளதாகத் தெரியவந்தது. அதனைக் கலைக்க வைத்தியரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.
ஒன்றும் செய்யமுடியாத நிலை. அடிக்கடி வைத்தியப் பராமரிப்புக்கு செல்ல வேண்டி வந்தது.
ஒருமுறை ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்போது தனத்துக்க தெரிந்த ஒருவர் அங்கு சென்றதால் அச் செய்தி தனத்துக்க வந்தது.
தனம் ஆஸ்பத்திரிக்குச் சென்று அவளை நலம் விசாரித்தான்.

அவள் நடந்ததைக் கூறி, " குழந்தை பிறந்தால் இரண்டு குழந்தைகளையும் நான் வளர்க்க முடியாது. ஆண் பிள்ளையை நான் வளர்க்கிறன்… பெண் பிள்ளையை உனக்குத் தாறன்… " என்றாள். .
அவன் " எனக்குப் பிரச்சினை இல்லை… இரண்டையும் என்னட்டைத் தந்தாலும் நான் வளர்க்கிறன் " | என்றான்.

உரிய மாதத்தில் குழந்தை பிறந்தது. பெண் பிள்ளையை அவனிடம் ஒப்படைத்தாள். ஆண்பிளையை தான் வளர்த்தாள்.
இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு இடங்களில் வளர்ந்தன.
மூன்று வருடங்கள் சென்றன. சுதாஜினியின் மனநிலையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. முகநூல் மூலம் தொடர்பு கொண்ட ஒருவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அது காதலாகக் கனிந்தது. திருமணம் செய்வதானால் குழந்தையை ஏற்க முடியாது என அவன் திடட்வட்டாகக் கூறிவிட்டான். அதனால் தனத்தின் தொலைபேசி இலக்கத்தை தேடிப் பெற்று, அவனுக்கு தொலைபேசி எடுத்தாள்.
" சுதாஜினி பேசுகிறன் "

" என்ன திடீரென்று… சுகமாக இருக்கிறாயா? மகன் எப்படி இருக்கிறார்?"
"அவன் விடயமாகத்தான் பேச வேண்டியுள்ளது. ".
" சொல்லுங்க பிரச்சினை இல்லை…"
"அவனையும் நீங்க வளருங்கோ… அதற்கான உரிமையைச் சட்டப்படி எடுத்துத் தாறன்."
" ஏன்? வளர்க்கிற ஆசை விட்டுப்போச்சா? "
" நான் வேறொருவரைத் திருமணம் செய்யப் போகிறன். அவருக்கு குழந்தையுடன் திருமைணம் செய்ய விருப்பம் இல்லை.. அதுதான்…"

" எனக்குப் பிரச்சினையில்லை…"
இரண்டு குழந்தைகளையும் தாய் தந்தையாக வளர்த்தான்.
"அப்பா… வீடு வந்திற்று நிப்பாட்டுங்கோ.." என்று மகள் உரத்துக் கூற, அவன் சிந்தனையும் தடைப்பட்டது. காரும் நின்றது.
யாவும் கற்பனை

நன்றி மணியம்
யாழ் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 1:19 pm

கசங்கிய கடிதம்
------------------
ஆடம்பரமான ஒரு சிறிய அழகிய மண்டபம். அங்கே உள்ள மேசை ஒன்றில் சிறிய படம் ஒன்று மாலை போட்டபடி இருக்க, அதற்கு முன் ஒரு விளக்கு, தான் எரிந்து, படத்துக்கு வெளிச்சம் கொடுத்தபடி இருந்தது.

படம் இருந்த மேடைக்கு, ஒருவர் எதையோ பறிகொடுத்தவர்போலவும், தொலைந்த எதையோ நிலத்தில் தேடுபவர் போலவும் தலைகுனிந்தபடி மேடைக்கு சென்றார். அங்கே வைக்கப் பட்டிருந்த ஒலிவாங்கியைக் கையால் திருப்பிச் சரிபார்த்து. பேசத் தொடங்கினார்.

உறவுகளே! எமது தாயக விடுதலையில் தன்னை இணைத்து, போராடி, இரத்தம் சிந்தி, விழுப்புண் அடைந்து, எமக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து, அங்கவீனமடைந்து உயிர் நீத்த உத்தமன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஒன்றுகூடி இருக்கிறோம். குறுகிய நாளில் தமது எந்தக் கஸ்டத்தையும் பாராது. ஓடீ ஓடி வேலைசெய்து, இந் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த என் நண்பர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அதுபோல் நாம் எமது விடுதலைப் போராளிகளையும் மறக்கக்கூடாது. எமது விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தாலும் அதில் ஈடுபட்ட அனைத்துப் போராளிகளையும் அரவணைத்து. அவர்களுக்கு கைகொடுத்து அவர்கள் வாழ்வை உயர்த்தவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இதே வேளை மரணமான போராளிகளை மனத்தில் நிறுத்தி எந்நாளும் அஞ்சலி செலுத்த வேண்டும். அதேபோல் காயப்பட்ட போராளிகளையும்; அவர்களின் குடும்பங்களையும் பாதுகாத்து. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்வதுடன் நம் மாவீரர்களின் பெற்றோர்களையும் விழிகளைப் பாதுகாக்கும் இமைகளைப்போல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இப்படியான விழாக்களை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும்.

மேடைக்கருகில் நின்ற ஒருவர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ''இந்த ஆள் நேரகாலம் தெரியாமல் அறுக்குது… நான் வேலைக்கு போக வேணும். முதலில் ஆளை மேடையைவிட்டு இறக்கு… '' என்று பக்கத்தில் நின்றவரிடம் சத்தம் போட்டார்.

அதை உணர்ந்தவர் போல் பேசியவர் தனது பேச்சை நிறுத்தி மேடையை விட்டு இறங்க வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. இடை இடையே கொத்து ரொட்டித் தாளம்...... காற்றோடு அதன் வாசம்..... பார்வையாளர்கள் காதும் மூக்கும் அதன்பால் இழுபட மேடையின் முன்பு இருந்த மக்கள் ஒவ்வொருவராக மெல்ல மெல்ல எழுந்து செல்லத் தொடங்கி விட்டார்கள்.

நடந்தவர்களின் காலில் அகப்பட்டு நசிந்து, கசங்கிப் போன நிலையில் ஒரு கடிதம், மண்டப நடுவில் தேடுவாரற்றுக் கிடந்தது. குனிந்து எடுத்தேன்.

நான் என்ன தவறு செய்தேன்.? என்னை ஏன் மற்வர்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். என் கால்கள் ஏன் ஊனமுற்றன. என் கைகள் ஏன் முடமாகின. நான் எம் தேசம் காக்க…. எம் மக்களின் விடுதலைக்காகப் போராடியது தவறா?

இளவதிலே என் பெற்றோரைப் பிரிந்தேன். என் உறவுகளைப் பிரிந்தேன். அம்மாவின் பாசமோ அப்பாவின் பாசமோ அறியாமல் காட்டிலே வளர்ந்தேன். என் பிரிவால் என் குடும்பம் கலங்கியது. அவர்களின் துக்கத்தையம் துயரத்தையும் அறிந்தும் நான் அவர்களைப் பார்க்கச் செல்லாமல் என் தேசத்தை நேசித்து, அதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டேன். துப்பாக்கியும் குண்டுகளும் ரவைகளும் என் உறவாகின. என்னைப்போல் இணைந்தவர்கள் நட்பானார்கள். நாம் வெற்றி பெற்றபோதெல்லாம் எல்லோரும் பாராட்டினாhர்கள். போராடினோம். ஆவேசத்துடன் போராடினோம்.

போராட்டத்தில் என் அண்ணனை இழந்தேன். அக்காவை இழந்தேன். தம்பியை இழந்தேன். தங்கையை இழந்தேன். இதனால் பாதிப்புற்ற என் பெற்றோரையும் இழந்தேன். நட்புகளும் நடந்து வந்த பாதையில் நடு ஆற்றில் வீழ்ந்தார்கள். போராட்டமும் முடிந்தது.

கைதியானேன். சிறைக்கூடங்கள் என்போன்றோரை வரவேற்றன. கொடுமைகளும் சித்திரவதைகளும் நாளாந்தம் எமக்காகப் பரிசாகக் கிடைத்தன. போராட்ட வடுவைப் பார்த்தவன் வகைவகையாச் சித்திரவதை செய்தான். அதனால் உடல் மேலும் ஊனமுற்றது. நோய்வாய்ப்பட்டேன். சிறைக்கு நான் பாரமானேன். பாராமானதை ஏன் வைத்திருப்பான் என எண்ணியவன் என்னைச் சிறையிலிருந்து தூக்கி வெளியிலே போட்டான்.

தத்தித் தத்தி நடந்து வந்தேன். என்னைப் பார்த்தவர் கண்களில் பரிகாசம்தான்; தெரிந்தது. போராட்டத்தைப் பாராட்டியவர்களோ. எஞ்சிய உறவுகளோ என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அருவருப்பான ஒரு பிராணியைப் பார்ப்பதுபோல் முகத்தைச் சுழித்தபடி என்னைப் பார்த்தார்கள். என் ஊரை நாடி நடந்தேன். என் வீடு இருந்த இடம் தெரியவில்லை. விபரம் அறியக் கூட அங்கு ஆட்களும் இல்லை. உண்ண உணவும் இல்லை. ஒதுங்க இடமும்; இல்லை. மாற்றிக் கட்டத் துணியும் இல்லை. மனத்தில் அமைதியும் இல்லை. யாரும் அற்ற நிலையில் அனாதையாக இப்படியான நிலையில்… வாழ்வதா…? சாவதா…? யோசித்தேன். வாழ்வதற்கு ஏதாவது ஒரு ஆதரவு வேண்டும். முயற்சித்தேன்…. முயற்சித்தேன்…. முடியவில்லை. எவருமே ஆதரவு கொடுக்கவில்லை. முன்வரவும் இல்லை. இதற்கு முன்னர் உங்களுக்கும் எழுதிய கடிதத்திற்கு இன்றுவரை பதிலும் இல்லை. என்னால் என்ன செய்ய முடியும்? எனக்கு ஒரு கயிறுதான் ஆதரவாகக் கிடைத்தது….

''என்ன நடுவில நின்று கடிதம் வாசிக்கிறீங்க… அங்கால கெதியாப் போங்கோ…'' என ஒருவர் என்னை அதட்ட.... வேறொருவர் ''அண்ணை... உத்தமனின் படம் ஒன்று வேண்டுங்க.... '' என்றார். விழாத் தொடர்ந்தது. நான் இடத்தைவிட்டு நகர்ந்தேன்

நன்றி Sembagan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 1:22 pm

பைத்தியங்கள்
---------

இந்த உலகத்தில் பைத்தியங்கள் அதிகரித்து கொண்டு செல்கின்றது காரணம் நாம் ஒவ்வொரு பொருளின் மீதும் பைத்தியமாக இருக்கிறோம் உதாரணம் பணம் , பொருள் , நகைநட்டுக்கள் அடுத்தவன் சொத்துக்கள் ( மண் , பொண் ) இன்னும் பல இதை உங்கள் கண்ணாடியை பார்த்து கேட்டால் தெரியும் .நாம் பைத்தியமா இல்லையா என்று. உன்மையில் பைத்தியம் இல்லாதவரை நீங்கள் பைத்தியாமா என்று சொன்னால் அவர் சிரிப்பார் அல்லது முறைப்பார் .அதுவே பைத்தியமே இல்லாத ஒருவரை பைத்தியகார அதாவது மனநல நிலையங்கள் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் கண்டு அவரை பைத்தியம் என்று சொன்னால் அவர் மனம் எவ்வளவு பாடு படும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் அது போல எந்தன் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது .

இந்த உலகத்தில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் அவதும் அன்னை வளர்ப்பினிலே இது பலவருடமாக சொல்லிக்கொண்டிருக்கும் குழந்தை வளர்ப்பு முறை ஆனால் ஒரு குழந்தை பிறந்து சிறிது காலம் கழிந்த பின் அந்த குழந்தைக்கு நடை பழக்கி ,கதை பழக்கி உன்மை எது பொய் எது நன்மை எது தீமை எது என்று சொல்லி கொடுக்கிறோம் அதுவே சில ஆண்டுகள் போன பின்பு அந்த குழந்தைக்கு நீ அங்கே போகதே , அதை செய்யாதே ,அவர்களுடன் சேராதே, என்று ஒரு மனிதனின் குணங்களில் இல்லாத ஒரு மனித பழக்கத்தை அந்த குழந்தைக்கு திணிக்கிறோம்.

இப்படித்தான் எனது வாழ்க்கையும் ஆரம்பிக்கின்றது எனது பெயர் வசந்த் எனது அம்மா ஒரு பொலிஸ் காண்ஸ்ரபிள் அப்பா ஒரு தொழிநுட்ப உத்தியோகத்தர் இருவரும் காதலித்து கல்யாணம் கட்டிக்கொண்டவர்கள் ஆனால் எந்த ஒரு விசயத்திலும் எதையும் விட்டுக்கொடுத்து வாழ தெரியாதவர்கள் எனக்கு நினைவு தெரிந்த காலம் தொடக்கம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை சச்சரவுகள்தான் வாய் பேச்சு அடிதடியில் முடியும் இடையில் நான் சிக்கி தவிக்க எனக்கும் அடி விழும் இதற்கு என்ன காரணம் என்னவென்று அறியாமல் அழுது கொண்டிருப்பேன் அந்த நாளில் நான்.

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்ல அப்பா ஒரு நாள் இரவில் யாருக்கும் தெரியாமல் அப்பா தூங்கில் இட்டு அகாலமரணம் அடைய இன்னும் தனிமைக்கு என் வாழ்க்கை நகரத்தொடங்கியது. என்னை பார்த்த்துக்கொள்வது என் அப்பாதான் என்னை குளிப்பாட்டி வெளிகிடுத்தி பாடசாலலைக்கு கூட்டி செல்வது எல்லாம் அப்பாதான் அம்மா என்னை கவனிப்பதில்லை காரணம் அவக்கு நேரம் இல்லை என்று சொல்லுவா லீவு எடுப்பதில்லை அப்பாவுக்கும் சந்தேகம் வந்துதான் வாய்பேச்ச்சு முற்றி தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்பது போக போக எனக்கு புரிய ஆரம்பித்தது அம்மாவின் போக்கு எனக்கு எனக்கும் பிடிக்கவில்லை வீட்டுக்கு நேரத்துக்கு வருவதுமில்லை என்னை கவனிப்பதுமில்லை என்னை பார்த்துகொள்ள வேலைக்காரி ஒருவரை வீட்டில் வைத்தார் ஒரு குழந்தையை சொந்த தாய் பார்பதை போல வேறு யாராலையும் பார்த்த்துகொள்ள முடியுமா ? அந்த வேலைக்காரியோ வீட்டுக்கு நேரத்துக்கு வரவேண்டும் வெளியில் எங்கையும் ஊர் சுற்ற கூடாது யாருடனும் சேரக்கூடாது என்று அதட்டும் கட்டளை போடுவாள் நான் நடந்து கொள்ளும் வீதம் பற்றி என் அம்மாவின் தம்பி மாமாவுக்கு போட்டு கொடுப்பது இவள்தான் என் மாமாவுக்கு எங்கள் அம்மாவின் சொத்தை அபகரிக்க கனநாளா ஆசை அந்த மாமா பயலுக்கு. என்னை பயமுறுத்திக்கொண்டே இருப்பான் . நீ ஏதாவது தப்பு தண்டா செய்தால் உன்னை கொன்று விடுவேன் என்பான்.

நான் சந்தோசமாக இருக்கும் நாட்கள் அந்த பாடசாலை நடக்கு ஐந்து நாட்கள்தான் நண்பர்களுடன் விளையாடுவது வெளியில் சுற்றுவது எனது நண்பர்கள் ராஜன், அகிலன் இந்த இருவருமே எனது உயிர் நண்பர்கள் அன்றைய நாள் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தேன் அம்மாவும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் பேசிய சாரம்சம் மட்டுமே என் காதில் விழுந்தது என்னை விடுதியில் சேர்க்க வேண்டும் என்பது மாமாவின் பேராசை அதற்கு அம்மா சம்மதம் தெரிவிக்க வில்லை ஒரு சிறிய சந்தோசம் என்றாலும் என் அம்மவை பற்றி நினைப்பேன் என்னை அவள் அவரசரத்திற்கு பெற்றாளோ அல்லது வெறும் உணர்ச்சிக்கு மட்டும் பெற்றாளோ அல்லது சமுதாயம் தன்னை குற்றம் சாட்ட கூடாது என்பற்கு பெற்றாளோ என்ற கேள்வி மட்டும் என் மனதில் மரதன் ஓட்டம் போல ஓடி கொண்டிருக்கும் . இரவும் தனிமையும் என் வயதும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக என்னை வேட்டையாட தொடங்க நான் அதைச் செய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று என்மனம் ஆட்டம் காண ஆரம்பித்தது. வேலைக்காரிக்கு வேட்டு வைக்க தொடங்கினேன் வீட்டில் இருக்கும் கள்ள வழி அதுதான் யன்னல் வழியாக வெளியில் செல்ல ஆரம்பிக்க தொடங்கினேன்.

அன்றைய நாளில் இருந்து யாருக்கும் தெரியாமல் எனது நண்பர்களுடன் பீடி குடிக்க ஆரம்பித்தேன் ,அதில் என்ன ஒரு சுகம் கூட இல்லையே என்று ,சிகரட் ,கோல்ட்லீவ் என்பன குடிக்க ஆரம்பித்தேன் காசுக்கு வீட்டில் திருட ஆரம்பித்தேன் அதன் சுவையையும் அறிந்து விட்டேனே பிறகு என்ன சாரயம் ஏதாவது குடிக்கலாம் என்று நினைத்து ஆளாளுக்கு ஐம்பது ரூபாய் போட்டு கள் குடிக்க அடுத்த கிரமத்துக்கு சென்று கள் வாங்கி குடித்தோம் புது பழக்கம் என்ற படியால் ஆளாளுக்கு குடித்த கப்புக்கு மேலாக சத்தி எடுத்து கப்பை நிறைத்து கொண்டு மரத்தை பிடித்து கொண்டிருந்தோம் தலை சுற்றால் என்னடா இப்படி ஆகிவிட்டதே எப்படி ஊருக்கு செல்வது என்ற பயத்தினால் யாருக்கும் தெரியாமல் மாலை வரை அந்த ஊரில் உள்ள புதரில் ஒளிந்திருந்தோம் இப்படி யாருக்கும் தெரியாமல் இந்த பழக்கம் தொடர ,பியரிலிருந்து எல்லாவற்றையும் ருசிக்க ஆரம்பித்து விட்டோம் மது பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டோம் இப்படி சிலகாலமாக எங்கள் வாழ்க்கை ஓடியது வீட்டில் அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவின் சைக்கிளில் இருந்து ஒவ்வொரு பொருளாக மூவரும் அவரவர் வீட்டில் திருட ஆரம்பித்தோம். படிப்பு என்பது மக்கி போக எப்படி கள்ள வேலை செய்து பிடிபடாமல் வாழ்வது என்று மூவரும் திட்டம் வகுத்து வகுத்து எனக்களது வேலையை காட்ட ஆரம்பித்தோம்.பாடசாலைக்கு போவது போல போய் வெளியில் சுற்றுவதும் விளையாடுவதும் இப்படி போக மச்சான் நாம அந்த தூள் இருக்குதானே அதை ஒருக்கா போட்டு பார்க்க வேணும் மச்சான் என்று அது தான் கடைசி ஆசை என்றான் திட்டம் ஒன்று போட்டேன் உங்கட சொந்த காரர்கள் யாராவது கொழும்பில் இருக்கிறார்களா என கேட்க ஒம் என்றான் அகிலன் அப்ப சரி நீ உங்கட வீட்ட எப்படியாவது ஒரு காரணம் சொல்லி அங்க போக ஏற்பாடு செய் என்றேன் அவனும் ஏற்பாடு செய்ய ராஜனோ காசுக்கு என்னடா செய்யுற என்ற கேள்விக்கு நான் எடுக்கிறன் என்று சொல்லி வீட்ட போய் அம்மாவின் காப்பை திருடி விற்று கொழும்புக்கு மூவரும் புறப்பட்டோம் .

அன்று இரவு சென்று மருதானையில் ஒரு விடுதியில் றூம் போட்டோம் அங்கு மூட்டை இல்லாத றூமும் இல்லை ஓட்டை இல்லாத றூமும் இல்லை தானே அங்கு தங்கின ஆட்சளூக்கு தெரியும். றூமில் தங்கியிருந்து மூவரும் யோசிக்க அதுதான் யாரிடம் போவது எங்கே வாங்குவது பற்றி யோசிச்சு கொண்டிருக்கும் போது பக்கத்து றூமில் இருந்து அணுகிற சத்தம் கேட்க எங்கள் சிந்தனை தூளாக இருந்தது துவண்டு எழுந்து பெண்ணாக மாறியது மச்சான் இதையும் ஒருக்கா செய்து பார்ப்பமே என சொல்ல எங்கள் றூமில் இருந்து அடுத்த றூமுக்கான ஓட்டை பெருப்பிக்கலானோம் இருட்டு என்பதால் ஒன்றுமே தெரியவில்லை சத்தம் மட்டுமே கேட்டது அன்றிரவு தூக்கம் இல்லாமல் காத்திருத்தோம் அவளை அழைப்பதற்க்கு அடுத்த நாள் காலை அந்த றூம் வாசல் திறபடாத என அலிபாபாவின் மந்திரங்களை மறந்தவர்கள் போல அந்த றூம் கதவினை பார்த்துக்கொண்டிருந்தோம் . கதவு திறபட உள்ளே இருந்து ஒரு நீக்றோ போல கருபான கட்டையன் ஒருத்தன் வந்தான் என்ன தம்பி நிற்கிற என்றான் இல்லை அண்ணை இரவு முழுக்க சத்தம் கேட்டதே அண்ணே அது தான் பார்க்கலாம் என்று வந்த என்று சொல்ல ஓ அதுவா தம்பி எனக்கு இரவு முழுவதும் நடுக்கலும் காய்ச்சலும் என்றான் எப்படியிருக்கும் பரதேசி நாயே அதுக்காடா ஆளை எழுப்புற அளவுக்கு அணுகுவ என்று மனதுக்குள் திட்டி தீர்த்தாலும் ஆசை அடங்கவில்லை அடுத்த நாள் காலை ஆள் பிடிக்க மருதானையை சுற்ற ஆரம்பித்தோம் ஆளாளுக்கு ஒரு திசையில் மூவரும் சென்று தேட யாரும் கிடைக்க வில்லை நான் அடிக்கடி சுற்றி திரிவதை பார்த்த சி .ஐ. டி காரன் என்னை பிடித்து விசாரிக்க கொண்டு சென்றான் அவர்களின் காரியாலத்திற்கு.

அங்கு ஏற்கனவே என் நண்பர்கள் அங்க கோழியை குந்த வைச்சது போல இருக்க கண்கள் பேசின ஆளாளுக்கு சாத்திரிக்கானுகள் என்பது ஆட்களை பார்க்கவும் தெரிந்துகொண்டேன் விசாரிக்க தொடங்க நாங்கள் சொந்த காரங்கள் வீட்டுக்கு வந்தோம் ஆனால் வழி தெரியவில்லை அதனாலதான் சுற்றி கொண்டிருந்தோம் என்று சொல்லியும் மருதானையில தங்கியிருந்தோம் என்று சொல்ல விடுதிக்கு வந்து விசாரித்து விட்டு விட்டு சரி நீங்க ஊருக்கு போங்க என்று சொல்லி எச்சரித்து விட்டான் . தப்பினோம் சாமி என்று ஊருக்கு வந்து சேர வீட்டில் மாமாவும் அம்மாவும் எனக்காக காத்திருந்தனர் எங்கே போன நீ என்று விசாரிக்கும் பொழுது மாமாவின் கைகள் என்னை அடிக்க ஆரம்பிக்க அம்மாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் நான் செய்த தவறுகள் ஒவ்வொன்றையும் பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல கேட்க என்னை என்னால் பார்க்க முடியாமல் மாமாவுக்கு வீட்டு மூலையில் இருந்த தடியால் ஒன்றை போட மண்டை கிழிந்தது பதினாறு தையல் உடனே ஆஸ்பத்திரி பொலிஸ் முறைப்பாடு என ஆரம்பித்து அம்மாவோ பொலிஸ் முறப்பாட்டை சமாளிக்க பார்க்க மாமா விட வில்லை நீதிமன்றதுக்கு சென்றது வழக்கு. என்னை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க ஆணையிட்டார் நீதிபதி காரணம் நான் மாணவன் என்ற படியால் .

அப்போதுதான் எனக்கு புரிந்து கொண்டது நாம் எங்கு சென்று தவறு செய்தாலும் அதை கண்டு கொள்ளும் கண்கள் உண்டு என்பதை . அங்கே சீர்திருத்த பள்ளி என்பது கவுன்சிலிங் கோம் அங்கே ஒவ்வொரு மதத்துக்கும் உரிய பெரியவர்கள் வந்து உபதேசம் செய்வார்கள் எனக்கு அது பிடிக்காது அங்கும் தனிமை என்னை நானே திருத்தி கொள்ள வேணும் என்பதை முடிவு செய்தேன் மனநலம் பாதிக்கப்படவன் போல நடிக்கலானேன் அப்போதுதான் ஒரு கிறிஸ்தவ பாதரியார் வந்தார் அவரோ மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தனியாக வைத்து பராமரிப்பவர் அவரிடம் நான் உன்மையை சொல்ல அதாவது எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்க வில்லை எப்படியாவது என்னை உங்க இடத்துக்கு அழைத்து செல்லுங்கள் என்றேன் அவர் மறுத்து விட்டு பின்னர் சரி அப்படியானால் நீ வாழ்க்கை பூரகவும் நடிப்பாயா எனக்கேட்க இல்லை ஐயா எனக்கு எப்ப வாழ பிடிக்கிறதோ அப்போது நான் தெளிந்தவன் போல விலகிவிடுவேன் என்றேன் அன்று சீர்திருத்த பள்ளியில் இருந்து என்னை பைத்தியம் போல என்னை கட்டி கூட்டி சென்றனர் அங்கே நான் உள் செல்ல என்னை எல்லா பைத்தியங்களும் சேர்ந்து என்னை பார்த்து பைத்தியம் பைத்தியம் என்றது எனக்கு சிரிப்பதா அழுவதா என்பது தெரியவில்லை இப்படி நாட்கள் சென்றன அந்த வாழ்க்கை பழகி கொண்டது மனதில் வஞ்சகம் இல்லாத ,அடுத்தவனுக்கு தீங்கு செய்ய நினைக்காத மனங்கள் ,அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாத மனிதர்கள் அவர்களுக்கென ஒரு தனி உலகம் தனி வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் இவர்களை பார்த்து பைத்தியம் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது இந்த உலகத்தில்.

எனக்கு இந்த வாழ்க்கை மிக பிடித்தது என் அம்மாவும் அடிக்கடி வந்து பார்த்து செல்வார் இதே பாசத்தை ஆரம்பத்தில் என்னிடம் நீங்கள் காட்டியிருந்தால் நான் இப்படியிருந்திருப்பேனா என்றும் கேள்வி எழும் ஆனால் என் சுய சொந்த புத்தி எங்கே சென்றது என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

சில நடந்த சம்பவங்களை வைத்து கற்பனையாக எழுதினேன்

நன்றி முனிவர் ஜீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 1:27 pm

அலுவலகத்தில் காட்டுப்புலி!
------------
காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.
நாலாவது நாள்...

பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால், எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.
அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)

அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார். நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை. இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது.

அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி, தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.


காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!

நீதி:

உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, செல்வமோ கிடையாது. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!

////
நன்றி
யாழ் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 1:30 pm

என் அறியாமை
------------
பஸ் பயணம் என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது அது என் வேலைக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்பட்டது. நான் காயத்திரி ஒரு ஆசிரியராக புதிதாக நியமனம் பெற்று மட்டக்களப்பில் ஒரு பாடசாலயில் கல்வி கற்பிக்கிறேன். மட்டக்களப்பு என்றால் மட்டக்களப்பு அல்ல கொஞ்சம் தூரம் செல்லவேண்டும் புதிய நியமனம் என்பதால் அங்கு சில காலம் பணியாற்ற வேண்டும் ஒரு நாள் காலை நான் எழும்புவதற்கு நேரமாகிவிட்டது அன்றைய நாள் எனக்கு சுடுதண்ணியை காலில் ஊற்றிக்கொண்டால் போல ஆகிவிட்டது சாப்பிடவும் இல்லை .ஒழுங்காக சாறி கட்டவும் தெரியாது அவதிபட்டுக்கொண்டே ஒருபடியாக சாறியை கட்டிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தேன் அம்மாவும் சாப்பிட்டு போடி என்று சொல்ல நான் தேவை இல்லை பஸ் போயிடும் என்று சொல்லி ஓட்டமும் நடையுமாக பஸ் தரிப்பிடத்திற்கு சென்றேன் நல்ல காலம் பஸ் அந்த நேரத்திற்கு வந்து விட ஏறினேன்.

அவசரத்தில் ஏறிய நான் சில்லறை காசு எடுக்க வில்லை பஸ் நடத்துனர் ரிக்கட் கொண்டு வர எனது பையை திறந்து பார்த்தேன் அதனுள் ஆயிரம் ருபாய் இருந்தது அதனை நீட்டினேன் அவர் அதை பார்த்து விட்டு சில்லறை தரும் படி கூற எனக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை பக்கத்தில் இருந்தவர்களிடம் வினவ யாரிடமும் அந்த காசை மாற்ற இருக்க வில்லை. ஒரு குரல் மட்டும் இந்தாங்கோ என்று என்னிடம் நீட்டியது அவருக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு ஒரு படியாக ரிக்கட்டை பெற்றுக்கொண்டேன் ஆனால் பஸ்சில் காலை நேரம் என்பதால் இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தது எல்லாம் வேலைக்கு செல்பவர்கள் நின்று கொன்டே செல்ல நேர்ந்தது நிற்பது என்பது எனக்கு பிடிக்காது .பிடிக்காது என்று ஏன் சொல்ல வந்தேன் என்றால் உள்ள ஒரு சின்ன இடுக்கு ஒருவரே நிற்க முடியாது அதுக்குள்ள நின்று போவதென்றால் ??? ஒரு சில காமுகர்களால் பெண்கள் படும் வேதனை இருக்கே அம்மா சொல்ல முடியாது உரசுவது கிள்ளுவது .இடிப்பது இந்த நரக வேதனையில் இருந்து தப்ப நான் நான் படும் பாடு இருக்கே அம்மா அதை சொல்லவே முடியாது.

நான் இருக்கும் ஊரில் இருந்து மட்டுநகர் நாற்பது கிலோமீற்றர் தூரம். பஸ்சில் பாட்டு போட்டு சென்றார்கள் மாணவர்களும் உள் இருந்தார்கள் படிக்கிறார்கள் இல்லையோ ஆனால் பாட்டு மட்டும் நன்றாக பாடுகிறார்கள் , பஸ் இடையில் நின்றால் பிச்சைகாரர்கள் ஏறுவார்கள் இவர்கள் தொல்லை ஒரு பக்கம் இருக்க எனக்கு சில்லறை மாற்றிக்கொடுத்வர் என்னையே பார்த்து கொண்டிருந்தார் .நானும் அவரை உதவி செய்தவர் தானே என்று நினைத்து சிரித்தேன் அவரும் சிரித்து விட்டு மீண்டு மீண்டும் என்னையே பார்த்து கொண்டிருந்தார் அது எனக்கு அருவ ருப்பாக இருந்தது நான் முறைக்க அவர் அதை பொருட்படுத்தவில்லை என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவ‌ர் கிட்ட வரும் படி கூறி ஏதோ செய்கை காட்டினார் நான் ஒன்றும் பேசாமல் அவர் கிட்டே சென்று உதவி செய்யுங்கள் உபத்திரம் செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டேன் .அவர் உடனே நீங்கள் இங்க இருங்க‌ள் என்ற‌படி எழும்பினார் .நான் இருக்கையில் அமர்ந்து கொண்டேன் அவர் என்னருகில் நின்று கொண்டிருந்தார் அவர் இறங்கும் இடம் வர அவர் என்னை பார்த்து காயத்திரி தானே நீங்கள் எப்படி இருக்குறீர்க்ள் என்று கேட்டு விட்டு இறங்கிவிட்டார் அவர் சென்ற பின்பு யார் அவர் என்ற சிந்தனை ஓடியது.



பின்பு அவர் பக்கத்தில் இருந்தவ்ர் ஒரு ஆண் பார்க்க நல்ல பண்பாக இருந்ததவர் அவர் வேலையை காட்ட ஆரம்பித்தார் அவர் தொடைகள் என்னை உரசி உரசி உறுத்தியது அவரை முறைத்து பார்த்தும் அவர் அவரின் வேலையை தொடர்ந்தார் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை ஒருவனிடம் இருந்து இன்னொருவனிடம் சிக்கியுள்ளதாக நினைத்து கொண்டு ஆண்வர்கத்தை நினைத்தும் கல்யாணம் எல்லாம் கட்ட கூடாது என்றும் நினைத்தேன் பொறுத்து பொறுத்து பார்த்தேன் என்னால் முடியவில்லை கூச்சல் இட்டு நடத்துனரை கூப்பிட நினைக்கும் போது அவரோ தம்பி இங்க வாங்கோ என பஸ் நடத்துனரை கூப்பிட பஸ் நடத்துனர் நீங்கள் இறங்கும் இடமா என்று கேட்க ஓம் என்று சொல்ல ஒரு நிமிடம் பொறுங்கோ என்று சொல்லி விட்டு இரு ஊன்று கோல்களை எடுத்து அவரிடம் கொடுத்தார் அவர் அதை வாங்கிக்கொண்டு ஊன்றி எழும்பி நடக்க ஆரம்பிக்கும் போது தங்கை நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள் இருக்கையில் இருக்கும் போது என் கால்கள் என்னிடம் இருக்காது அது அங்கும் இங்கும் இருக்கும் அதனுள் பூட்டப்பட்டிருக்கும் ஆணிகள் உங்களை குத்தியிருந்தால் என்னை மன்னியுங்கள் என்று சொல்லிவிட்டு இறங்கி சென்றார் .



அப்பொழுது என்னால் எதுவும் பேச‌ முடியவில்லை ஒரு சில ஆண்கள் செய்யும் சம்பவங்களால் எல்லோரையும் தவறாகவும் தப்பாகவும் நினைக்க தோன்றினாலும் அவரிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன் அவரை காணும் போது .பஸ் நடத்துனரோ அவர் போரில் இரு கால்களை இழந்தவர் என்ற் சொன்னார்.
பாடசாலை சென்றேன் அங்க நடந்தை நினைத்தும் என் அறியாமையை நினைத்தும் அவசரபுத்தியை நினைத்தும் கவலையுற்றேன் பாடசாலை நிறைவுற்றதும் மீண்டும் பஸ்சில் ஏறி வீடு வரும் பொழுது எனக்கு காசு மாற்றி தந்தவரை பார்த்தேன் ஆனால் அவர் என்னை பார்த்தும் பார்க்காம‌லும் ஒரு வெளிநாட்டவருடன் சரளமாக ஆங்கிலம் பேசி வருவதையும் அவர் தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றி பேசியும் வந்தார் .நான் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து அதை கேட்டு வந்தேன் .அதற்கு அந்த வெள்ளகாரன் உடன் கட்டை ஏறுவது பற்றி கேட்ட போது அது ஒரு காலத்தில் இருந்தது ஆனால் இப்ப இல்லை என்றும் அவருக்கு தமிழர்களின் கலை கலாச்சாரம் பற்றியும் சொல்லியும் வந்தார் .





நான் என் மனதுக்குள் அவரிடம் இவ்வளவு திறமை இருக்குமா என நினைத்துக்கூட பார்க்க வில்லை நான் அவரிடம் எப்படி என் பெயர் உங்களுக்கு தெரியும் என கேட்க உன் அண்ணனுடன் நான் வெளிநாட்டில் வேலை செய்த நான் அப்ப உங்களது குடும்ப‌ போட்டோவை உங்க அண்ணன் காட்டியிருக்கார் என்று சொல்ல ஓ நீங்கதானா? மதன் என்றாள் ஓம் என்று சொல்ல நீங்க நன்றாக படித்தவர் என்று அண்ணா சொன்னாரே ஓம் ந‌ல்லா படித்தால் இங்க வேலை கிடைக்காதே இப்ப நான் ஒரு பாடசாலையில் சாதாரண பியுனாக‌ வேலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் இறங்கி செல்கிறார் நானும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்துடன் வீடு செல்கிறேன்

பெயர்கள் கற்பனை

முனிவர் ஜீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum