ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
Page 1 of 1
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
ஆறுவயதில் அயல் வீட்டில் - நீ
பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்....
பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்......
பாதி தூக்கம் உன் வீட்டில் - நான்
மீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........!!!
அப்பப்போ சண்டை.......
தடியெடுத்து அடிகும் மனதைரியம்.....
எனக்கும் இல்லை உனக்கும் இல்லை.....
ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்....
மாவீரர் நாம்...........................!!!
சற்று நேரம் கூட ஆகாது.........
வீட்டில் கிடைத்த இனிப்போடு.......
ஓடிவருவேன் உன் வீட்டுக்கு..........
பாதி கடித்த இனிப்பை.......
உன்னிடம் தர பறந்து போகும்.....
சண்டையின் பகை......................
நட்பென்பது எப்போதும் இனிமை.....!!!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
கவிப்புயல் இனியவன்
பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்....
பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்......
பாதி தூக்கம் உன் வீட்டில் - நான்
மீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........!!!
அப்பப்போ சண்டை.......
தடியெடுத்து அடிகும் மனதைரியம்.....
எனக்கும் இல்லை உனக்கும் இல்லை.....
ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்....
மாவீரர் நாம்...........................!!!
சற்று நேரம் கூட ஆகாது.........
வீட்டில் கிடைத்த இனிப்போடு.......
ஓடிவருவேன் உன் வீட்டுக்கு..........
பாதி கடித்த இனிப்பை.......
உன்னிடம் தர பறந்து போகும்.....
சண்டையின் பகை......................
நட்பென்பது எப்போதும் இனிமை.....!!!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
கவிப்புயல் இனியவன்
Re: ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
நட்புக்கு வசந்த காலம்......
மழைக்காலம் தானே......
வேண்டுமென்றே நனைவதும்......
சேற்றுக்குள் உருளுவதும்......
வீட்டுக்கு வந்து அடிவாங்குவதும்.....
மழைகாலம் வசந்த காலந்தானே.....!!!
வடிந்தோடும் வெள்ளதில்.......
பாய்ந்தோடும் காகித கப்பல்......
அப்போதுதான் படித்த குறிப்பு......
சற்றும் தாமதிக்காமல்.......
கிழித்து விடும் காகித கப்பல்.......
அடுத்த நாள் இருவருக்கும்.....
கிழிந்த கால்சட்டைமேல்.....
விழும் செமபூசை..........................!!!
வாற்பேத்தையை மீன் குஞ்சென.....
ஓடியோடி பிடித்து வீட்டுக்கு.....
கொண்டுவருவதும் வந்த கையோடு......
அம்மா பறித்தெறிவதும்..........
கடுப்போடு கத்தி பிரழுவதும்......
இன்றுவரை நினைவில் இருக்கும்....
வசந்த காலம்...............................!!!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02
கவிப்புயல் இனியவன்
மழைக்காலம் தானே......
வேண்டுமென்றே நனைவதும்......
சேற்றுக்குள் உருளுவதும்......
வீட்டுக்கு வந்து அடிவாங்குவதும்.....
மழைகாலம் வசந்த காலந்தானே.....!!!
வடிந்தோடும் வெள்ளதில்.......
பாய்ந்தோடும் காகித கப்பல்......
அப்போதுதான் படித்த குறிப்பு......
சற்றும் தாமதிக்காமல்.......
கிழித்து விடும் காகித கப்பல்.......
அடுத்த நாள் இருவருக்கும்.....
கிழிந்த கால்சட்டைமேல்.....
விழும் செமபூசை..........................!!!
வாற்பேத்தையை மீன் குஞ்சென.....
ஓடியோடி பிடித்து வீட்டுக்கு.....
கொண்டுவருவதும் வந்த கையோடு......
அம்மா பறித்தெறிவதும்..........
கடுப்போடு கத்தி பிரழுவதும்......
இன்றுவரை நினைவில் இருக்கும்....
வசந்த காலம்...............................!!!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02
கவிப்புயல் இனியவன்
Re: ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
உச்சிவெயில் சுட்டெரிக்கும்......
குதிப்பாதம் வெந்து துடிக்கும்.......
வேண்டுமென்றே மெல்லனடந்து.....
இரண்டு மணிக்கே வீடுசெல்வோம்.....
அவன் வீட்டில் எனக்கும்.....
என்வீட்டில் அவனுக்கும்..........
திட்டியே கொட்டிதீர்த்துடுவர்.........!
தும்பியை பிடித்து வாலில்......
நூல் பட்டமாய் பறக்கவிட்டு......
புல்வெளியில்பட்டாம்பூச்சியை......
வேர்வைசிந்த கலைத்துபிடித்து.....
ஒற்றை சிறகு ஒடிந்த பூச்சியை......
மெல்ல தடவி கண்ணீர் விட்டு.......
வரும் வழியில்மாமரத்துக்கு.....
கல்லெறிய வீட்டின் ஓட்டில் பட......
ஒளிந்து ஒளிந்து வீட்டுக்கு வந்த நாள்......
வாழ்ந்த நாளில் வசந்த காலம்.........!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 03
கவிப்புயல் இனியவன்
குதிப்பாதம் வெந்து துடிக்கும்.......
வேண்டுமென்றே மெல்லனடந்து.....
இரண்டு மணிக்கே வீடுசெல்வோம்.....
அவன் வீட்டில் எனக்கும்.....
என்வீட்டில் அவனுக்கும்..........
திட்டியே கொட்டிதீர்த்துடுவர்.........!
தும்பியை பிடித்து வாலில்......
நூல் பட்டமாய் பறக்கவிட்டு......
புல்வெளியில்பட்டாம்பூச்சியை......
வேர்வைசிந்த கலைத்துபிடித்து.....
ஒற்றை சிறகு ஒடிந்த பூச்சியை......
மெல்ல தடவி கண்ணீர் விட்டு.......
வரும் வழியில்மாமரத்துக்கு.....
கல்லெறிய வீட்டின் ஓட்டில் பட......
ஒளிந்து ஒளிந்து வீட்டுக்கு வந்த நாள்......
வாழ்ந்த நாளில் வசந்த காலம்.........!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 03
கவிப்புயல் இனியவன்
Similar topics
» நட்பு ..நட்பு ..நட்பு ...!!!
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» வெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» வெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|